2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.தாவடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் சனிக்கிழமை (03) இரவு நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் தாவடியினைச் சேர்ந்த ஜெ.ஜெகதீஸ்வரன் (27), சாவகச்சேரியினைச் சேர்ந்த வி.ஸ்ரீராம் (23) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக  மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X