2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இளம் உள்ளூராட்சி மன்ற பணிப்பாளராக பிரகாஸ் தெரிவு

Super User   / 2014 மே 05 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இளம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் தேசிய அமைப்பின் உபதலைவராகவும் யாழ்.மாவட்டப் பணிப்பாளராகவும் வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

'இளைஞர் சக்தியின் அடிப்படையில் நல்லாட்சி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உள்ளீடாகக் கொண்ட ஆக்கத்திறனான உள்ளுராட்சியை ஏற்படுத்தல் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இச்சம்மேளனத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் 2014ஆம் ஆண்டிற்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தலும், கடந்த சனிக்கிழமை (04) கொழும்பு றோயல் கல்லூரியின் நவரங்ககல அரங்கில் இடம்பெற்றது.

முதலில் மாவட்டம் தோறும் பணிப்பாளர்கள் தெரிவு இடம்பெற்றது. இதில் யாழ் மாவட்ட பணிப்பாளராக பிரகாஸினை தெரிவு செய்வதாக, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவனால் முன்மொழிய, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் ஆ.ஆனைமுகன் வழிமொழிய பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து, இளம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவிற்கான தேர்தல் மாவட்டங்களின் பணிப்பாளர்களுக்கிடையில் இடம்பெற்றது, இதிலும் உபதலைவராக பிரகாஸ் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், நாடு முழுவதிலும் உள்ள உள்ளுராட்சி மன்றங்களிலிருந்து இளம் உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X