2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பேருந்துக்காக காத்திருந்த மாணவனை வாகனம் மோதி விபத்து

Kanagaraj   / 2014 மே 05 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், கி.பகவான்

யாழ். கைதடி தொழிற்பயிற்சி அதிகார சபையின் முன்னால் பேருந்திற்காக காத்திருந்த மாணவனை வேகமாக வந்த வாகனம் இன்று திங்கட்கிழமை (05) மோதியதால் குறித்த மாணவன் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாக வந்த வாகனம் மாணவனை மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த தொழிற்பயிற்சி அதிகார சபையில் கல்விகற்கும் மகேந்திரராஜா சத்தியசீலன் (20) எனும் மாணவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

எந்த வாகனம் மோதியது என்பது தொடர்பில் இன்னமும் தெரியவில்லையெனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X