2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Kanagaraj   / 2014 மே 05 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கோண்டாவில் அரசடிப் பிள்ளையார் ஆலயத்தில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி இன்று திங்கட்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியினைச் சேர்ந்த திரவியநாயகம் றனிஸ்ரன் (27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆலயத்தின் கோபுரத்திற்கு வர்ணம் பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மேற்படி இளைஞன், தவறுதலாக மின் இணைப்பில் கை பட்டமையினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு இளைஞனும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X