2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தாவடி பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுமித்தி தங்கராசா 
யாழ்.தாவடி தெற்கு  பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவத் தலைமையகம்  செவ்வாய்க்கிழமை (06) உறுதிப்படுத்துள்ளது. 

ஜே - 192 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள இந்தப் பிரதேசத்திலிருந்து யூரியா பையினுள் கட்டப்பட்டிருந்த 5 ஆயிரம் ரி.56 துப்பாக்கி ரவைகள், இதர தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் என்பன மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

குறித்த காணியினை காணி உரிமையாளர்கள் துப்புரவு செய்தபோது, ஆயுதங்கள் இருப்பதைக் கண்ணுற்று 511 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தினைத் தொடர்ந்து இராணுவத்தினர் அவ்விடத்திற்குச் சென்று குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X