2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இளைஞன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். கரவெட்டி காட்டுப்புலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் செவ்வாய்க்கிழமை (06) மேற்கொண்ட தாக்குதலில் குறித்த இளைஞன் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லிடியப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த உதயன் நிரோசன் (23) என்பவரே தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றின் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய போது இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X