2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முதலீடுகளைச் செய்ய வெளிநாட்டவர்கள் முன்வர வேண்டும்

Suganthini Ratnam   / 2014 மே 07 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணத்தில் முதலீடுகளைச் செய்வதற்கு வெளிநாட்டவர்கள் முன்வர வேண்டுமென யாழ். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (07) வருகை தந்துள்ள இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களைச் சேர்ந்த 12 பேரைக் கொண்ட அதிகாரிகள்     குழுவினருடனான சந்திப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர்  இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் குறைவாக உள்ளன. இதனால்,  கலாசாரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இவர்களுக்கான  வேலைவாய்ப்புக்களை  வழங்கக்கூடிய வகையில் வெளிநாட்டவர்கள் இங்கு  முதலீடுகளை செய்ய முன்வர வேண்டுமெனவும் சுந்தரம் அருமைநாயகம் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த இக்குழுவினர், இது தொடர்பில் ஆராய்வதாகக் கூறினர்.

மேலும், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் தொடர்பில்  சுந்தரம் அருமைநாயகம் இங்கு தெரிவித்தார்.

குறிப்பாக, மருதங்கேணிப் பிரதேசத்தில் சிலிக்கன் மண் அதிகமாகக் காணப்படுவதால், அங்கு கண்ணாடித் தொழிற்சாலையை முதலீட்டாளர்கள் நிறுவமுடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், இங்கு  முதலீடுகளைச் செய்ய முதலீட்டாளர்கள் விரும்பினால், காணி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகவும் சுந்தரம் அருமைநாயகம் கூறினார்.

இச்சந்திப்பின்போது, யாழ்ப்பாணத்தில்; போருக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட  அபிவிருத்திகள்  தொடர்பில்  படங்களுடன் இக்குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X