2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

டைனமைட் வெடிவைத்து மீன்பிடித்தவர்களுக்கு பிணை

Kanagaraj   / 2014 மே 07 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ்.குருநகர் கடல் பகுதியில் டைனமைட் வெடி வைத்து மீன் பிடித்த இருவரை தலா 2 இலட்சம் ரூபா பிணையிலும் அதனை கொள்முதல் செய்த இருவரையும் தலா 1 இலட்சம் ரூபா பிணையிலும் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று செவ்வாய்க்கிழமை (06) உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த வழக்கினை எதிர்வரும் ஜீன் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், மீன்களை நாரா நிறுவனத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கும் படியும் நீதவான் கடற்றொழில் நீரியல் வளத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

குருநகர் கடல் பகுதியில் டைனமோட் வெடியினை பாவித்து மீன்பிடித்த குருநகர் மீனவர்கள் இருவரையும், அந்த மீன்களைக் கொள்முதல் செய்த கொட்டடியினைச் சேர்ந்த இருவரையும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்து, யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை மேற்படி நால்வரையும் நேற்று செவ்வாய்க்கிழமை (06) யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X