2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வீட்டில் நகைகள் திருட்டு

Super User   / 2014 மே 09 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.வண்ணார்பண்ணை பகுதியிலுள்ள வீடொன்றில் புதன்கிழமை (07) இரவு 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை (08) உரிமையாளரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த தருணம் வீட்டிற்குள் நுழைந்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக உரிமையாளர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X