2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தப்புச் செய்தால் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  நா.நவரத்தினராசா, சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்களோ, ஊழியர்களோ, மாணவர்களோ குற்றம் செய்தவர்கள் இல்லை. அப்படி அவர்கள் குற்றம் ஏதாவது செய்து இருந்தால் உரிய முறையில் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டியதே உரியவர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை விடுத்து அச்சுறுத்தும் வகையில் இனந் தெரியாதவர்கள் என்ற போர்வையில் நடந்து கொள்வது வேதனையானதும் வெறுக்கத்தக்க விடயமுமென யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உபதலைவர் கலாநிதி அ.திருக்குமரன் தொவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர்கள், மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்ட துண்டுபிரசுரத்தினை எதிர்த்து போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (09) பல்கலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'இவ்வாறான அச்சுறுத்தல்கள் காரணமாக ஏற்கனவே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த பல பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்கள்.

இத்தகைய ஒரு நிலைமையை மீண்டும் உருவாக்கி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை நாட்டைவிட்டு விரட்டி பல்கலைக்கழகத்தை மூடச்செய்வதே இத்தகையவர்களின் நோக்கமென நாம் நினைக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X