2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Super User   / 2014 மே 20 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ்.அச்சுவேலிப் பகுதியில் முச்சக்கரவண்டி, வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தவரை மோதியதில், நடந்து சென்றவரும், முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டியினைச் சேர்ந்த சின்னத்தம்பி கனகநாதன் (85), யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த மன்நினோல்ட் ஜெராட் (28) என்ற இருவருமே படுகாயமடைந்தனர்.

முச்சக்கரவண்டியை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .