2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மாணவர்களை தாக்கிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 26 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

யாழ். மல்லாகத்திலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த 04 மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இருவரை  ஞாயிற்றுக்கிழமை (25) மாலை கைதுசெய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

கசூரினா கடற்கரைக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிள்களில் திரும்பிக்கொண்டிருந்த மேற்படி மாணவர்களை, ஞாயிற்றுக்கிழமை (25) கந்தரோடையில் வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.

இதில் காயமடைந்த இவர்கள்; தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மாணவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவரையும் உடுவிலைச் சேர்ந்த ஒருவரையும் கைதுசெய்ததாகவும்  பொலிஸார் கூறினர்.

குறித்த இருவரும் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X