2025 ஜூன் 30, திங்கட்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை : ஊழியர் காயம்

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (25) மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் பணத்தினைத் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தினால் காயமடைந்த சிவசுப்பிரமணியம் சுதர்ஸன் (32) என்ற நபர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X