2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் மீட்பு

Kogilavani   / 2014 மே 29 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன் 


யாழ்.கொட்டடி மற்றும் நாவாந்துறைப் பகுதிகளிலிருந்து தடை செய்யப்பட்ட 4 தொகுதி தங்கூசி வலைகளை வியாழக்கிழமை (29) காலை மீட்டதாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதிப்பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

நாவாந்துறைப் பகுதியிலிருந்து 3 தொகுதி வலைகளும், கொட்டடிப் பகுதியிலிருந்து 1 தொகுதி வலைகளும் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குறித்த வலைகள் இன்னும் உரிமை கோரவில்லையென்றும், அவற்றினை யாழ்.நீதிமன்றத்தில் பாரப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்துவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அது இந்த வருடத்திலிருந்து கடுமையான அமுலில் இருக்கும் என்றும் கடந்த திங்கட்கிழமை (26) யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கணேசமூர்த்தி தெரிவித்திருந்த நிலையில் தங்கூசி வலைகள் வியாழக்கிழமையும் டைனமைற் வெடிவைத்துப் பிடிக்கப்பட்ட மீன்கள் புதன்கிழமை  (28) இரவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X