2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சி.வியின் தடை, கட்டுப்படுத்தும் செயற்பாடு

Kogilavani   / 2014 மே 30 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிப்பதற்கு தமது அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை எனவும், செய்திகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருப்பது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதை கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடு என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியளாலர் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'முக்கிய சந்திப்புக்கள் இடம்பெறும் போது நேரில் சென்று செய்திகளை சுயமாகச்  சேகரிப்பதன்  மூலமாகவே முழுமையான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஊடகவியலாளர்கள் கருதுகின்றார்கள்.

இதன் மூலமாகவே மக்களுக்கும் சரியான தகவல்களைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடும் போது வடமாகாண சபை வித்தியாசமானது. மத்திய அரசுடன் முரண்படும் ஒரு மாகாண சபையாக வடமாகாண சபையே இருக்கின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளின் வெளிப்பாடாகவே அது பார்க்கப்படுகின்றது.

வடமாகாண சபையில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய மக்கள் ஆவலாக இருப்பது இதன் காரணத்தினால்தான். இந்த நிலையில்தான் வடக்கேயுள்ள ஊடகவியலாளர்கள் முதலமைச்சரை நாடி வருகின்றார்கள்.

எனவே, இவற்றைக் கவனத்திற்கொண்டு முக்கியமான சந்திப்புக்கள், ஆலோசனைக் கூட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் வட மாகாண சபை முதலமைச்சர் ஊடகவியலாளர்களை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

போதிய இடவசதி இல்லை என்பதை மட்டும் இதற்கு ஒரு காரணமாகக் கூறாமல், முதலமைச்சர் தமது முடிவை மறுபரிசீலனை செய்து ஊடகவியலாளர்கள் சுயமாக செய்திகளைச் சேகரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்' எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X