2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தங்கூசி வலைகளை பாவித்த நால்வர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 04 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். எழுவைதீவுக் கடலில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி  மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  நால்வரை செவ்வாய்க்கிழமை (03) மாலை கைதுசெய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து 04 தொகுதி தங்கூசி வலைகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

சுதுமலை, சாவற்கட்டு, காக்கைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே  கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை புதன்கிழமை  (04) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .