2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாடசாலையில் திருட முயற்சி : சிறுவன் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.ஆவரங்கால் நடராஜ ராமலிங்க வித்தியாலயத்தில் இன்று (08) அதிகாலை கதவுகளை உடைத்து திருட முயற்சித்த வேளை, காவலாளியால் அத் திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தத் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஆவரங்கால் பகுதியினைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி பாடசாலையில் கதவுகள் உடைக்கும் சத்தம் கேட்டு காவலாளி உள்ளே சென்று பார்த்த போது, இரண்டு பேர் காவலாளியினைக் கண் மதில் பாய்ந்து ஓடியுள்ளனர்.

உடனடியாக இது தொடர்பாக காவலாளி பாடசாலை அதிபருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, அதிபர் வந்து பார்த்த போது, சிற்றுண்டிச் சாலை, நூலகம் மற்றும் களஞ்சிய அறை ஆகியவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்த போதும், அங்கு எவ்வித பொருட்கள் திருடப்படவில்லை.

அதிபர் உடனடியாக இவ்விடயத்தினை அச்சுவேலிப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்து காலணி மற்றும் ஆண்கள் அணியும் உள்ளாடையொன்றினையும் மீட்டனர்.

தொடர்ந்து மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடத்தியதில் ஆவரங்கால் பகுதியினைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டார்.
குறித்த சிறுவனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X