2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றியவருக்குத் தண்டம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாரதி அனுமதிப்பத்திரம், வரிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம், அனுமதிப்பத்திரம் ஆகிய பத்திரங்கள் இல்லாமல் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற நபருக்கு 62 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.

கொடிகாமம் கச்சாய்ப் பகுதியில் வைத்து இந்நபரை கொடிகாமம் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (05) கைதுசெய்தனர்.

மேற்படி நபரை புதன்கிழமை (6) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட பத்திரங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமைக்கு 12 ஆயிரத்து 500 ரூபாவும்  அனுமதியின்றி மணல் கொண்டு சென்றமைக்கு 50 ஆயிரம் ரூபாவுமாக 62 ஆயிரத்து 500 ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .