2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பஸ் நிலையத்திலிருந்து சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, விஸ்வமடு பஸ் நிலையக் கட்டிடத்திலிருந்து ஆணொருவரின்  சடலமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.ஜோசப் (வயது 41) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பஸ் நிலையக் கட்டிடத்திலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்த நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் இச்சடலம் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .