2025 ஜூலை 09, புதன்கிழமை

மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மானிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை தனியார் வகுப்பில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசியர் ஒருவரை கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தனர்.

சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஆசிரியர் ஒருவர் மானிப்பாய் செல்லமுத்து மைதானப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனியார் வகுப்புக்கள் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், இந்த வகுப்பிற்கு வந்த மாணவியொருவரை வீட்டில் வைத்து மேற்படி ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அறிந்த அப்பகுதி மக்கள், மேற்படி ஆசிரியரை சனிக்கிழமை (16) பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .