2025 ஜூலை 09, புதன்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் படுகாயம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மன்னார் வீதியில் (ஏ – 32) சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் மின்னல் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (22) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழங்காவிலைச் சேர்ந்த எஸ்.டினேஸ் என்பவரே மின்னல் தாக்கத்துக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டு முழங்காவிலுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இவர், மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்.

மின்னல் தாக்கி வீதியில் கிடந்த இவரை அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .