2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் நகை, பணம் திருட்டு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், பிறவுண் வீதியிலுள்ள வீடொன்றின் ஜன்னல் கம்பிகளை வளைத்து செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை உள்நுழைந்துள்ள திருடர்கள், அங்கிருந்த 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று  கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 8 பவுண் நகை (3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்) மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளர், செவ்வாய்க்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்ததாகவும், அதற்கிணங்க விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .