2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காப்பாற்றப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கச்சதீவு கடற்பரப்பில் படகு மூழ்கிய நிலையில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது காங்கேசன்துறை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், இன்று புதன்கிழமை (03) உத்தரவிட்டார்.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மேற்படி 6 மீனவர்களும், அவர்களின் படகு மூழ்கிய நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) காலை தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களை காப்பாற்றிய காங்கேசன்துறை கடற்படையினர், ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்படி மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .