2025 ஜூலை 12, சனிக்கிழமை

வடமாகாண பேரவை செயலாளராக அ.சிவபாதம் நியமனம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, எம்.றொசாந்த்

வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம், இன்று புதன்கிழமை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் கடமையாற்றி வந்த கே.கிருஸ்ணமூர்த்தி, தனது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அப்பதவியிலிருந்து விடைபெற்றதை அடுத்தே, அப்பதவி வெற்றிடத்துக்கு அஇசிவபாதம் நியமிக்கப்பட்டுள்ளார் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண கட்டிட தொகுதியில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது இந்த பதவி மாற்றம் பற்றி அறிவிக்கப்பட்டது.

புதிய பேரவை செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம் இன்று புதன்கிழமை (10) முதல் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபை 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கிருஸ்ணமூர்த்தியே வடமாகாண பேரவை செயலாளராக கடமையாற்றி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .