2025 ஜூலை 12, சனிக்கிழமை

மாணவர்களுக்கு காலணிகள் அன்பளிப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ்.வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 80 மாணவர்களுக்கு தலா 1000 ரூபா பெறுமதியான காலணிகள் வியாழக்கிழமை (11) வழங்கப்பட்டன.

இந்த காலணிகள் வட்டு மத்திய கல்லூரியில் வைத்து இந்து வாலிபர் சங்க பொருளாளர் க.ரகுமான் வழங்கினார்.

இந்த இந்து வாலிபர் சங்கத்தால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள், வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வாழ்வாதார மற்றும் சுயதொழில் கடன் உதவிகள் உள்ளிட்ட பல உதவிகள் அங்கத்தவர்களின் நிதியுதவியின் மூலம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .