2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Gavitha   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மைக்குளம் சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில்  ஞாயிற்றுக்கிழமை (14) ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து, வீதியின் இரு திசைகளிலிருந்தும் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியே  இடம்பெற்றுள்ளது.

இதில் சிலாபம் மைக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே. எம். பிரேமசிரி என்பவர் உயிரிழந்துள்ளதுடன், சிலாபம் காக்கப்பள்ளி பொன்னங்கன்னி பிரதேசத்தினைச் சேர்ந்த டி. எம். சுரங்க திசாநாயக்க என்பவர் படுகாயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .