2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கீழே விழுந்து பலி

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியில் செவ்வாய்க்கிழமை (21) மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

சன்னாகம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கெங்காதரன் தவக்குமார் (வயது 29) என்பவரே உயிரிழந்தார்.

சுன்னாகத்திலிருந்து புத்தூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த இவர், மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்த பள்ளத்தில் இறங்கி ஏறியபோது வீழ்ந்துள்ளார்.
 
இதில் படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .