2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கடலட்டைகளை திருடியவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். மண்கும்பான் 4ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள கடலட்டை வளர்ப்பு பண்ணைக்குள் நுழைந்து 13 கடலட்டைகளை திருடிய சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் புதன்கிழமை (22) உத்தரவிட்டார்.

சிவநாதன் றொபின்சன் என்பவருடைய கடலட்டை வளர்ப்பு பண்ணையில் தலா 1,500 ரூபாய் பெறுமதியான 13 கடலட்டைகளை கடந்த திங்கட்கிழமை (20) இரவு திருடப்பட்டது.

பண்ணை உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குருநகர் 3 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த சந்கேநபர்கள் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டு, புதன்கிழமை (22) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .