2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இறப்பர் வெடிமருந்து வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

George   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் தடை செய்யப்பட்ட இறப்பர் வெடிமருந்துகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை மே மாதம் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (21) சென்ற பொலிஸார், கூலித் தொழிலாளியான சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன் நான்கு பைகளில் இருந்த 9 கிலோ 416 கிராம் இறப்பர் வெடிமருந்தையும் கைப்பற்றினர்.

சந்தேகநபர்கள், பொலிஸ் விசேட காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .