Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடலில் சட்டவிரோதமான முறையில் குழைபோட்டு கணவாய் பிடித்த 6 மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, வியாழக்கிழமை (23) தீர்ப்பளித்தார்.
பருத்தித்துறை கடலில் குழைபோட்டு கணவாய் பிடித்து குற்றச்சாட்டில் 7 மீனவவர்களை யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கடந்த 8ஆம் திகதி கைதுசெய்தனர். குழைபோட்டு பிடிக்கப்பட்ட 25 கிலோகிராம் கணவாயும் இதன்போது கைப்பற்றப்பட்டது.
மீனவர்கள் ஏழு பேருக்கும் எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு, வியாழக்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 6 மீனவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நீதவான் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
ஒரு மீனவர் மட்டும் தான் சுற்றவாளியென தெரிவித்தார். அவர் தொடர்பான வழக்கை ஜுன் மாதம் 3ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago