2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இரண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக்கிளைகள் மூடப்பட்டன

Gavitha   / 2015 ஜூன் 10 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

புலோலி பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் இயங்கி வந்த மந்திகைக்கிளை மற்றும் புலோலி தென்மேற்கு ஆகிய கிளைகள் மூடப்பட்டமை தொடர்பில் புலோலி தென்மேற்கு கிளைத் தலைவர் எஸ்.ஜெகதேவன் மற்றும் செயலாளர் ப.அல்பின் ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

75 ஆண்டு கால பழமை வாய்ந்த மந்திகைக்கிளை, சொந்தக் காணியில் இயங்கி வந்த அதேவேளை 40 வருடகால பழமை வாய்ந்த புலோலி தென்மேற்குக் கிளை வாடகைக் கட்டத்திலும் இயங்கி வந்தது.

இந்த இரண்டு கிளைகளும் மூடப்பட்டுகின்றமை தொடர்பில், புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் அறிவிக்கவில்லையென்றும, இதன்மூலம் கிளைக்குழுக்கள் அவமதிக்கப்பட்டுள்ளதுடன், கிளைக்குழுக்களில் செயற்பாட்டு நோக்கத்தை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருக்கு கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர்கள் கூறினர்.

புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் 13 கிளைகளும் 4 கோப்சிற்றிகளும் 3 மக்கள் கடைகளும் செயற்பட்டு வந்தன. இதுவரையில் 2 கிளைகளும் 2 மக்கள் கடைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X