Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 14 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு வீட்டிலிருந்தவரை அடித்துக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவர் நேற்று சனிக்கிழமை (13) கைதுசெய்யப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் 22ஆம் திகதி காரைநகர், வலந்தலை பகுதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீடொன்றுக்குள் ஐந்து பேர் கொண்ட குழுவினருடன் அத்துமீறி நுழைந்து அந்த உறுப்பினரைத் தாக்கியுள்ளார்.
இதில் கிருபராஜா கிருஜாந்தன் (வயது 30) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சிகிச்சை பெற்று கடந்த 8ஆம் திகதி வீடு திரும்பிய உறுப்பினர் தன்னைத் தாக்கிய தவிசாளருக்கு எதிராக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு ஐவரையும் கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago