2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பொதுக்கிணறை புனரமைக்குமாறு மனு

Gavitha   / 2015 ஜூன் 15 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் மேற்கு இம்மாஸ் நகரில் அமைந்துள்ள பொதுக்கிணறு சேதமடைந்திருப்பதால், அதனை புனரமைத்து தரும்படி கோரி அக்கராயன் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் கரைச்சி பிரதேச செயலகத்திடம் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களில் ஒன்றாக, அக்கராயன் பிரதேசம் காணப்படுகின்றது. இந்த பொதுக்கிணறிலிருந்து குடிநீர் பெறமுடியாததன் காரணத்தினால் சுமார் 40 குடும்பங்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

அக்கராயன் மத்தியப்பகுதி, கெங்காதரன் குடியிருப்பு, இம்மாஸ்நகர், 50 வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடுமையான நீர்தட்டுப்பாடு ஏற்படும். எனினும் இதற்போது, மேற்படி கிணறு மாத்திரம் வற்றாது, அங்குள்ள அனைத்து மக்களுக்கும் நீர் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X