2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கையைப் பிடித்தவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஜூன் 15 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

யாழ்.புலோலி தெற்குப் பகுதியில் பெண்ணொருவரின் கையைப் பிடித்து இழுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தையல் கடை உரிமையாளரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா,  திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.

பிறந்த தினத்துக்கு உடுப்புத் தைப்பதற்காக, கடந்த 13ஆம் திகதி தையல் கடைக்கு சென்ற பெண்ணை, தையல் கடைக்காரர் கையைப் பிடித்து இழுத்து, தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

பிடியிலிருந்து நழுவிய பெண், இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

சந்தேகநபருக்கு பிணை வழங்காமல் விளக்கமறியலில் வைத்தால்தான் இவ்வாறான தவறுகள் நடைபெறாது என்று பருத்தித்துறை பொலிஸார் நீதவானிடம் கோரியிருந்தமைக்கமைய நீதவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X