Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 25 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான், செல்வநாயகம் கபிலன்
வரணி பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.
ஆசிரியர் தரம் 3, தரம் 4 மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பில் மாணவிகள் அதிபருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அதிபர் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
சிறுவர் நன்னடத்தை அதிகாரி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆசிரியர் வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
56 minute ago
27 Jun 2025