2025 ஜூன் 28, சனிக்கிழமை

டிப்பர் வாகனங்கள் பறிமுதல்

Menaka Mookandi   / 2015 ஜூன் 28 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிசென்ற இரு டிப்பர் சாரதிகளுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்க, சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வெள்ளிக்கிழமை (26) உத்தரவிட்டதாக கொடிகாமம் பொலிஸார் சனிக்கிழமை (27) தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை (24), கிளாலி பகுதியில் இருந்து கொடிகாமம் மிருசுவில் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிசென்ற இரு டிப்பர் வாகனங்களை கொடிகாமம் பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு வெள்ளிக்கிழமை (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் தங்கள் ஒப்புக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .