2025 ஜூன் 28, சனிக்கிழமை

பெண்களுடன் சேஷ்டை செய்தவர்களுக்கு எச்சரிக்கை

Gavitha   / 2015 ஜூன் 29 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், பெண்களிடம் சேஷ்டை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 பேரையும் எச்சரிக்கை செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) விடுவித்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட திடீர் ரோந்து நடவடிக்கையின் போது, கந்தரோடை, உடுவில் பகுதியில் பெண்களிடம் சேஷ்டை செய்த 12 பேரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து, அறிவுரைகளையும் வழங்கி அவர்களை விடுவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .