2025 ஜூன் 18, புதன்கிழமை

26 இந்திய மீனவர்களின் வழக்கு மேல் நீதிமன்றிற்கு மாற்றம்

A.P.Mathan   / 2013 மே 06 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரின் வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 6ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 26 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிபதி ஆர் மகேந்திரராஜாவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 26 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் குறித்த வழக்கு விசாரணைகளை யாழ். மேல் நீதிமன்றிற்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .