2025 ஜூன் 30, திங்கட்கிழமை

6 பவுண் நகை கொள்ளை

Kanagaraj   / 2014 மே 30 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவிலடியிலுள்ள வீடொன்றில் வியாழக்கிழமை (29) இரவு 6 பவுண் நகை மற்றும் 1 தொலைபேசி ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளரால் இன்று வெள்ளிக்கிழமை (30) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் மேற்படி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும், அவை 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெறுமதியினை கொண்டது எனவும் உரிமையாளர் முறையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X