Princiya Dixci / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக செய்தியாளர்களைத் தெளிவுபடுத்தும் முழு நாள் செயலமர்வொன்று, புத்தளம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்நிகழ்வுதனை ஏற்பாடு செய்திருந்தது.
புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்தா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் விசேட வளவாளராக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் அஸ்வின் ஜே ரொட்ரிகோ கலந்துகொண்டார்.
புத்தளம் மாவட்டத்தின் செய்தியாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026