எம்.யூ.எம். சனூன் / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தெற்காசிய வலையமைப்பின் இலங்கைக்கான சமாதான நீதவான்களின் பேரவையால் இந்த தேசகீர்த்தி விருது வழங்கப்பட்டுள்ளது.
கல்விப் பணியில் சமூகத்துக்காக இன, மத பேதமின்றி பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகின்றமைக்காகவும் தேசத்தின் சமாதானத்துக்கு சேவையாற்றும் சமாதான நீதவானை கருத்தில்கொண்டும் இவருக்கு இந்த விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், சிறந்த சமூக சேவையாளரும் புத்தளம் தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் கால்பந்தாட்ட கழகத்தின் தலைவரும், புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு செயலாளரும், இணக்க சபை உறுப்பினரும் ஆவார்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025