Editorial / 2018 ஜூன் 19 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

06. ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
ஆனமடுவ-கன்னங்கர பாடசாலைக்கு, 42 இலட்சம் ரூபாய் செலவில், மாணவர்களின் பெற்றோர் ஒன்றிணைந்து புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அன்பளிப்பு செய்துள்ளனர்.
“சிசு அரண’ என பெயரிடப்பட்டுள்ள குறித்த கட்டடம், நேற்று முன்தினம்(18), பாடசாலை அதிபர், என்.விஜேரத்ன தலைமையில், வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பெற்றோர் சுமார் 6 மாத காலம் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பை வழங்கி, சிரமதான பணிகள் மூலம் இந்த கட்டடத்தை நிர்மாணித்துள்ளனர்.
இவ்வாறு பாடசாலைக்கு அளப்பரிய சேவையாற்றிய பெற்றோருக்கு, பாடசாலை நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025