2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மதனமோதக உருண்டைகள் சிக்கின

Princiya Dixci   / 2015 நவம்பர் 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், மாரவில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கு தயார் நிலையிலிருந்த மதனமோதக உருண்டைகள் அடங்கிய பொதிகள், நேற்று செவ்வாய்க்கிழமை (17) கைப்பற்றப்பட்டுள்ளதாக மாரவில் பொலிஸார் தெரிவித்தனர். 

சுமார் 400 மதனமோதக உருண்டைகள் அடங்கிய பொதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. 

மாரவிலவில் இயங்கும் விற்பனை நிலையம் ஒன்றிலிருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X