2025 ஜூன் 30, திங்கட்கிழமை

30 ஆயிரம் பெறுமதியான நூல்கள் கையளிப்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகர சபையின் பொது நூலகத்துக்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நூல்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

புத்தளம் நகர சபையில்; புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம நூலகர் திருமதி நைலா இப்ராஹிமிடம் நூல்கள் கையளிக்கப்பட்டன.
நகரசபையின் செயலாளர் டபிள்யூ.ஜி.நிஷாந்த குமார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகர சபையின் பிரதம நிர்வாக அதிகாரி ஆர்.விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையே நடைபெற உள்ள போட்டிகளில் புத்தளம் பொது நூல் நிலையம் அதிக கூடிய புள்ளிகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக அங்கு குறைபாடாக இருக்கும் நூல்களை பெற்றுத்தருமாறு நூலக நிர்வாகம் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே வடமேல் மாகாண சபை உறுப்பினர் இந்த நூல்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர்,

'புத்தளம் நகர சபையில் சேவயாற்றியவன் என்ற வகையில், இங்கு காணப்படும் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் சில கடப்பாடுகள் உள்ளன. எனவேதான் அரசியல்வாதி என்ற விடயத்துக்கு அப்பால் நின்று இந்த நூல்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.

பழைய கட்டடத்தில் இயங்கி வந்த புத்தளம் பொது நூலகம், அமரர் எம்.எச்.எம்.அஷ்ரபின் முயற்சியின் பலனாக புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

நாம்  தற்போது நகர அபிவிருத்தி தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர்  ரவூப் ஹகீமுடன்;; கலந்துரையாடி வருகிறோம். வடமேல் மாகாணத்தில் நகர அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எமது நகரம் உள்வாங்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த காலத்தில் இவ்விடயத்தில் எமக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாம் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனக்கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X