Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாத்தாண்டிய, தங்கொடுவ பிரதான வீதியில் கொட்டராமுல்ல சந்தியிலுள்ள பஸ் நிலையத்தில் வைத்து பஸ்ஸில் ஏற முயன்ற பெண்ணொருவர், தவறி விழுந்து பின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து, இன்று திங்கட்கிழமை (31) காலை 8.10க்கு இடம்பெற்றுள்ளதாக நாத்தாண்டிய பொலிஸார் தெரிவித்தனர்
கொட்டரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான அஹமட் தாகிம் மல்லிஹா உம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ள நாத்தாண்டிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
12 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
20 minute ago