2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'போதைப் பொருளுக்கு எதிரான சிறுவர் நடைபவனி'

Sudharshini   / 2016 மார்ச் 06 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

'போதைப் பொருளுக்கு எதிரான சிறுவர் நடைபவனி' என்ற தொனிப்பொருளில் கந்தானை புபுதுகம கல்வாரி சிறுவர் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில சனிக்கிழமை (05) நடைபவனி ஒன்று புபுதுகமயில் இடம்பெற்றது.

போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பது தொடர்பில், பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலின்,  ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் சசிகுமார், மத தலைவர்கள், பிரதேச முக்கியஸ்த்தர்கள், பெற்றோர்கள், உட்பட  பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X