2025 மே 24, சனிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லவிருந்த 13 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        (எஸ்.எம்.மும்தாஜ்)

சட்டவிரோதமாக  அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்ததாகக் கூறப்படும்  13 பேர் நேற்று வியாழக்கிழமை இரவு வென்னப்புவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக இவர்கள் வென்னப்புவ, தும்மோதரை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும் இதனையடுத்து அவ்வீட்டை  முற்றுகையிட்ட பொலிஸார், சந்தேக நபர்களையும் அவ்வீட்டு உரிமையாளரையும் கைதுசெய்துள்ளதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் முல்லைத்தீவு, வவுனியா, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை இன்று வெள்ளிக்கிழமை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X