2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிப்புரம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிகிச்சை நிலையம் திறப்பு

Kogilavani   / 2012 ஜனவரி 01 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
துருக்கி நாட்டின் ஐ.எச்.எச். நிறுவனத்தின் அனுசரனையில் புத்தளம் ஜமாத் இஸ்லாம் அமைப்பினால் புத்தளம் முள்ளிப்புரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிகிச்சை நிலையம் நேற்று சனிக்கிழமை புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸினால் திறந்து வைக்கப்பட்டது.

இக்கட்டிட நிர்மாணிப்புகளுக்காக ஐ.எச்.எச். நிறுவனத்தினால் 25 இலட்சம் ரூபாவும்  புத்தளம் ஜமாத் இஸ்லாம் அமைப்பினால் 7 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.

புத்தளம் ஜமாத் இஸ்லாம் அமைப்பின் பொறுப்பாளர் மௌலவி மின்ஹாஜின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் ஐ.எச்.எச். நிறுவன பணிப்பாளர் முஹம்மது ஹனபி உதுலுகுலு உட்பட உயரதிகாரிகள் குழுவும், அகில இலங்கை ஜமாத் இஸ்லாம் செயலாளர் டாக்டர் மஹேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X