2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

படகிலிருந்து வீழ்ந்து மீனவர் பலி

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 19 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம் மீனவ துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் படகிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.

சிலாபம் மெதபாடுவெல்ல  பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மாகஸ் பெரேரா (வயது 44) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இம்மீனவர் சென்ற படகு கடல் அலையில் சிக்கி தத்தளித்த நிலையிலேயே இம்மீனவர் படகிலிருந்து தவறி வீழ்ந்துள்ளதாக சிலாபம் மீனவத் துறைமுகத்திலிருந்த ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இவரின் சடலத்தை மற்றுமொரு மீனவர் படகில் கரைக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அம்மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X