2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கற்பிட்டி கடலில் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                              (ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
கற்பிட்டி கடலில் காணாமல் போன மற்றுமொருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை கண்டக்குழி கடற்கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்ற அறுவரில் ஒருவர் கடலில் மூழ்கி பலியானதுடன் மற்றுமொருவர் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு காணாமல் போனவரின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த உவைஸ் முஹம்மது அஸாம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .